பாலா முத்துமலர் விவாகரத்து.. UNSEEN PHOTOS.. முழு விவரம்.

பாலா முத்துமலர் விவாகரத்து.. UNSEEN PHOTOS.. முழு விவரம்.
பாலா-முதுமலர் தம்பதியினருக்கு 2004 ஆண்டு, ஜூலை 5ம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் மதுரையில் நடந்தது. முதலில் அவரது மனைவி மலர் மறுத்தாராம். படமே இவ்வளவு கொடூரமாக எடுக்கும் இவர் தன் கணவனாக வந்தால் எப்படி இருப்பாரோ? பேசுவாரோ? என்றெல்லாம் நினைத்தாராம்.

ஆனால் படத்தில் வேலை செய்யும்போது மட்டுமே அவ்வளவு intenseஆக இருப்பார். ஆனால் குடும்பம் குளத்தை என்று வந்தால் மிகவும் அன்பாக பாசமாக இருப்பாராம். இதை ரசிகர்கள் நேர்காணலில் முத்துமலரே கூறியிருப்பதை நாம் அறிவோம்.

பின்னர் நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த 5 ஆண்டுகளாகவே சீராக செல்ல வில்லை என்று நெருங்கி இருப்பவர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்கள் மனத்தால் 4 வருடங்களாகவே பிரிந்து தான் வாழ்கின்றனர். இப்பொழுது நீதிமன்றம் மூலம் அதிர்க்கரபூர்வமாக சுமூகமாக பிரிந்துள்ளனர்.
முத்துமலர் அவர்களுக்கு சினிமாவில் நிறைய தோழிகள் உண்டு. விஜயகுமார் மகள் ப்ரீத்தா, ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தான் உயிர் தோழிகளாம். எப்போதும் இவர்களுடன் தன தன்னுடைய நேரத்தை செலவளித்துவருவாராம்.

பாலா படம் எப்படி இருக்குமோ அப்படியே தான் அவரோட வாழ்க்கையும் இருந்திருக்கும் என்று பலர் கூறினாலும் அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு சந்தோசமாக இருந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை. இதை அவர் மனைவி முத்துமலரே கூறியுள்ளார்.

பாலா மிகச் சிறந்த படைப்பாளி அவரிடம் சில குறைகள் இருந்தாலும் அதை அனுசரித்து மீண்டும் இருவரும் தம்பதிகளாக இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்திப்போம்.
தற்போது சூர்யா நடிப்பில் பாலா ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஜோதிகாவும் இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க போவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.