கன்னி பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் வெற்றி பார்ட்டி மோட். ஹாட் போட்டோஸ் வைரல்.
![Ponniyin selvan celebrations photos viral](/images/2022/11/07/maniratnam-ponniyin-selvan-celebrations-2-.jpg)
இனிமேல் நம் சிறப்புமிகு சோழ பரம்பரையின் ஆதித்த கரிகாலனை விக்ரம் மூலமாகவும், குந்தவையை திரிஷா மூலமாகவும், வந்திய தேவனை கார்த்தி மூலமாகவும் அருள் மொழி வர்மனாகிய ராஜ ராஜ சோழனை ரவி மூலமாகவும் காணலாம். திரு.அமரர் கல்கி இவர்களை நினைத்துதான் பொன்னியின் செல்வனை படைத்திருப்பாரோ என்றே நினைக்க தோன்றுகிறது. பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்த திரு.மணிரத்னம் அவர்களுக்கு நன்றி.
இந்த காவியத்தை உருவாக்கும் கனவு கனவாகவே போய்விடும் என்று எண்ணி இருந்த ரசிகர்களுக்கு மணிரத்னத்தின் விடா முயற்சியால் இந்த படம் உருவாகியுள்ளது. மூன்று முறைக்கு மேல் ட்ரை செய்து எப்படியோ செய்துகாட்டிவிட்டார். இதை சாத்தியப்படுத்திய லைக்கா நிறுவனத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அப்படியொரு தயாரிப்பாளர் இல்லையென்றால் எப்படி இது சத்தியம் ஆகியிருக்கும். இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.
![Ponniyin selvan celebrations photos viral](/images/2022/11/07/maniratnam-ponniyin-selvan-celebrations-1-.jpg)
இந்த வெற்றியை அவர்கள் மட்டும் கொண்டாடாமல், இந்த வெற்றியின் உருவாகுவதற்கு காரணமே அந்த நூல் தான், அமரர் கல்கி எழுதியது. அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, ஒரு கொடியை வழங்கியுள்ளனர் லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் மற்றும் மணிரத்னம் சேர்ந்து. இதுவொரு நல்ல விஷயம். ஒரு சிலர் கதையை வேறு இடத்தில இருந்து எடுத்தாலும், அவர்களுக்கு கிரேடிட்ஸ் காசு கொடுக்காமல் எல்லாம் இதே சினிமாவில் ஏமாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் பொன்னியின் செல்வன் படக்குழுவாக ஒன்னு சேர்ந்து, வெற்றியை ஜாலியாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். அதுவும் இயக்குனர் மணிரத்னத்தை பெண்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது இணையத்தில் வைரல். டான்ஸ் மாஸ்டர் பிருந்தா அதை பகிர்ந்திருக்காங்க.
Latest Photos:
PS-1 success meet🔥
— Brindha Gopal (@BrindhaGopal1) November 6, 2022
With my favourite people#manisir #aishwaryarai @trishtrashers @khushsundar pic.twitter.com/oM759gZato