தமிழ் கடல் நெல்லை கண்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது. அரசியல் தலைவர்கள் அஞ்சலி. வீடியோ வைரல்.
![Nellai kannan RIP news update](/images/2022/08/19/nellai-kannan-rip-update.jpeg)
அரை நூற்றாண்டுக் காலம் இலக்கியத் துறையில், சிறந்து விளங்கிய பேச்சாளர்,எளிய நகைச்சுவை கலந்த ஆழ்ந்த சமூக கருத்துகளுக்குச் சொந்தக்காரர்,நேர்த்தியான எழுத்தாளர்,“தமிழ்க்கடல்” திரு.நெல்லை கண்ணன் (77வயது) அவர்கள் மறைந்தார்.
நெல்லை கண்ணன் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்;
அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"
-தேமுதிக தலைவர் விஜயகாந்த்
சிந்தித்தால் தமிழ், வாய் திறந்தால் பழம்பாடல், சொல்வதெல்லாம் மேற்கோள்கள் என, தமிழே உயிராக வாழ்ந்த தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் மறைந்துவிட்டார். அவரது மூவாத மேடைத் தமிழ் மூத்த செவிகளில் ஒலித்தபடியே இருக்கும். தமிழய்யாவுக்கு என் அஞ்சலி.
-மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்
பல அரசியல் தலைவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் பேசியது,
அவரைப் போல் தமிழை நேசிக்கவும், பேசவும் இங்கு எவரும் இல்லை; நெல்லை கண்ணனுக்கு நிகர் நெல்லை கண்ணன் தான்.
-நெல்லை கண்ணன் உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அஞ்சலி!
Video:
”அவரைப் போல் தமிழை நேசிக்கவும், பேசவும் இங்கு எவரும் இல்லை; நெல்லை கண்ணனுக்கு நிகர் நெல்லை கண்ணன் தான்”
— Sun News (@sunnewstamil) August 19, 2022
- நெல்லை கண்ணன் உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அஞ்சலி!#SunNews | #NellaiKannan | #RIPNellaiKannan | #Thirumavalavan pic.twitter.com/vlTfoL5g7G